வெள்ளி, 6 டிசம்பர், 2013

அழகு குறிப்புகள்



பொடுகு நீங்க... 


விளக்கெண்ணெயை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். பால், மிளகு, வெந்தயம், வேப்பிலை அரைத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். துளசி இலையை அரைத்து தலைக்கு தேய்த்தால் பொடுகு நீங்கும். எலுமிச்சைச் சாற்றை தலைக்கு தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் பொடுகு நீங்கும். ஒருவர் உபயோகித்த சீப்பை அடுத்தவர் உபயோகிக்கக் கூடாது

தேக்கரண்டி கடலைமாவு, 3 தேக்கரண்டி சீகைக்காய் பொடி, 1 தேக்கரண்டி ஊற வைத்த வெந்தயம் இவற்றை சோறு வடித்த கஞ்சியில் கலந்து கொள்ள வேண்டும். வாரத்திற்கு 2 முறைகள் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து 10 நிமிடம் ஊறியபின், மேற்கூறிய கஞ்சியைத் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ்விதம் செய்து வந்தால் ஒரு மாதத்தில் பொடுகு நீங்கும்.


இள நரையை தடுக்க...

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் சரிசமாக கலந்து, துளசி இலை சேர்த்து சூடாக்கி, காய்ச்சி, ஆற வைத்து தினமும் தலையில் தடவ வேண்டும்.

ஒரு பீட்ருட், ஒரு காரட், ஒரு தக்காளி, கொஞ்சம் கரு வேப்பிலை கொஞ்சம் இஞ்சி போட்டு அரைத்து தினமும் ஒரு கப் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் இளநரை போய்விடும்.

சுத்தமான நல்லெண்ணையுடன் முழு நெல்லிக்காய் மற்றும் கருவேப்பிலை விழுதினை கொண்டு காய்ச்சி தயாரிக்கும் எண்ணெயைத் தேய்த்து குளிப்பதால் நரையை கட்டுப்படுத்தலாம்.

தலை முடி கொட்டுகிறதா?

உலகின் பல்வேறு நாடுகளில் கருஞ்சீரகமும் அதன் எண்ணெய்யும் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதிலிருந்து கருஞ்சீரகத்தின் மருத்துவப் பயன்களை எவராலும் மறுக்க முடியாது என்பதை உணர முடிகிறது.

மனித உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கக் கூடிய ஆற்றல் பராகா (கருஞ்சீரக) எண்ணெய்க்கு உண்டு. பராகா எண்ணெய்யை அரை டீஸ்பூன் எடுத்து அதே அளவுள்ள தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டால் வாழ்நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ முடியும். டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது.

உடலுக்கு நோய் வந்துவிட்டால், நோயைக் கட்டுப்படுத்த பராகா (கருஞ்சீரக எண்ணெய்) மிகவும் உதவும், நோய்க்கு ஏற்றாற்போல் வெந்நீர், பால், பழச்சாறு ஆகியவற்றுடன் இந்த எண்ணெய்யை கலந்து சாப்பிட்டால் நோய் கட்டுக்குள் வந்துவிடும். இந்த எண்ணெய்யை ஏதாவது ஒன்றில் கலந்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

பெண்களே - தலை முடி கொட்டுகிறதா? : பெண்களைப் பொருத்தவரை தலைமுடி கொட்டுவது என்பது மிகப் பெரிய பிரச்சினை. ஆண்களைப் பொருத்தவரை இளவயது நரை மிகப் பெரிய பிரச்சினை. இரண்டுக்கும் பராகா எண்ணெய் உதவும். எலுமிச்சை சாற்றை தலை முழுவதும் (முடியின் வேர்க்கால்களில்) நன்றாகத் தேய்த்து 15 நிமிஷம் காத்திருங்கள். முடி நன்றாக உலர்ந்துவிடும். பின்னர் ஷாம்பூ போட்டுக் குளிக்க வேண்டும். குளித்து முடித்தவுடன் தலையை ஈரப்பதமின்றி நன்றாகத் துடைத்து விடுங்கள். பின்னர் முடியின் வேர்க்கால்கள் முழுவதும் பரவும் அளவுக்கு பராக்கா எண்ணெய்யை நன்றாகத் தேயுங்கள். இவ்வாறு தொடர்ந்து ஆறு மாதம் செய்தால், நீங்கள்தான் முடிசூடா மன்னர்.

பேன்களை ஒழிக்க...

சீதாப்பழக் கொட்டைகளைக் காய வைத்து, தூளாக்கிக் கொள்ள வேண்டும். இத்துடன் நல்லெண்ணெயைக் கலந்து பாட்டிலில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெய்யைத் தலைக்குத் தேய்த்தால் பேன்கள் நீங்கி விடும்.

துளசி இலைகளை தலையணையின் மேல் போட்டு அதன் மேல் துணி விரித்துப் படுத்தால் பேன்கள் நீங்கி விடும்.

வெங்காயத்தை அரைத்து தலைக்குத் தேய்த்தால் பேன்கள் நீங்கி விடும்.

பேன் தொல்லையை போக்க எளிய வழிகள்!

பேன் தொல்லை, குறிப்பாய் பள்ளிக் குழந்தைகளை ரொம்பவே பாதிக்கும் ஒரு பிரச்சினை. கெமிக்கல் ஷாம்புகள் எத்தனையோ இருக்கின்றன. இவை எவ்வளவு தூரம் பயன்தருகின்றன என்று கேள்விக்குறியாக நினைப்பவர்கள், இந்த இயற்கை முறையை கையாளலாம்.

துளசியையும், வேப்பிலையையும் சம அளவில் எடுத்து பொடி செய்து, தலைக்கு குளிக்கும் அன்று எண்ணெய்யில் கலந்து நன்கு மண்டையில் தடவி மசாஜ் செய்து பின் குளிக்கவும். பேனின் அளவைப் பொறுத்து வாரம் ஒரு முறையோ இரு முறையோ இப்படி குளித்து வர பேன் போயே போச்சு.

பருக்களை போக்க...

பயத்த மாவு, கடலை மாவு, காய்ந்த ரோஜா இதழ், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதை முகத்தில் தடவி காய்ந்தவுடன் கழுவிடனும். சிவப்பு, நீல வெளிச்சத்தை பருக்கள் உள்ள பகுதியில் பாய்ச்சினால் பருக்கள் நீங்குகின்றன. இயற்கையான சூரிய ஒளியில் பருக்கள் குணமடைந்தாலும் அதனால் தோல்களில் பாதிப்பு ஏற்படும். ஆனால் சிவப்பு நீல ஒளிகளால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. 

பருக்களை போக்க நாள் ஒன்றுக்கு 15 நிமிடம் சிவப்பு அல்லது நீல ஒளிக்கற்றைகளை பாய்ச்சினால் போதும்.
நீல விளக்கு ஒளி பருக்களை அகற்றுகின்றன. சிவப்பு ஒளி எல்லாவித நோய்களையும் தணிக்கும் ஆற்றல் வாய்ந்தது.

முகம் பளபளக்க...

முகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்கமின்றி இருக்கவும்... இதோ வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில வழிமுறைகள்...

எலுமிச்சை சாறும், தேனும் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதனால் முகத்தில் விழும் சுருக்கங்கள் மறையும்.
முகத்திற்கு உருளைக்கிழங்கு சாற்றையும் தடவலாம். இதனால் முகம் பளிச்சென்று இருக்கும்.
தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டார் ஒரு ஸ்பூன், ஈஸ்ட் பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.
தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள் கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ் செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.
ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணை ஒரு ஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ் செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும்.
இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள் காலையில் முகம் கழுவி வரவும். சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பாக மாறும்.
வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணை வழியாமல் இருக்கும், முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.

நகங்களை பராமரிக்க...
முகத்தை அலங்கரிப்பது போல் நகத்தை அலங்கரிப்பதிலும் பெண்கள் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறார்கள். நகத்தின் வளர்ச்சிக்கு கரோட்டின் என்ற புரதச்சத்து தான் காரணம். எனவே உங்கள் உணவில் புரதம் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். நகத்தை பற்களால் கடிக்க கூடாது. துணி துவைக்க தரமான சோப்புகளை பயன்படுத்துங்கள். வீட்டு வேலை முடிந்ததும் கைகளை கழுவுங்கள். சிறிது நேரம் கழித்து கிரீம் தடவுங்கள். இதனால் நகங்களை உடையாமல் பாதுகாத்து கொள்ளலாம். நகத்துக்கு சாயம் பூசும் முன் முதல் கட்டமாக பேஸ் கோட் தடவவும். இதனால் நகச் சாயத்தின் நிறம் நகங்களில் படியாமல் இருக்கும்.
  

மாநிறத் தோற்றம் வர என்ன செய்ய வேண்டும்?

நிறம் பற்றிய கவலை வேண்டவே வேண்டாம். கறுப்பும் அழகுதான் கண்மணி! பார்லரில் க்ரீம் ப்ளீச் சிகிச்சையை மாதம் ஒரு முறை செய்தாலே போதும்... நிறம் மாறும். இப்போதுபயோ வேக்ஸ்என்ற சிகிச்சையும் உள்ளது. சருமத்தை வேக்ஸிங் மூலம் சரி செய்து நல்ல நிறத்தைப் பெறலாம். 

திருமணத்துக்கு ஒரு மாதம் முன்புஸ்கின் லைட்னிங் ஃபேஷியல்செய்தால் பலன் கிடைக்கும். ப்ளீச் செய்த பிறகு வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். சிலருக்கு ப்ளீச் செய்தால் தோல் வறண்டு போகும். அவர்கள் இரவு தூங்கப் போவதற்கு முன்புமாய்ஸ்சரைஸர் க்ரீம்தடவிக்கொள்வது நல்லது. 

வீட்டிலேயே சில சிகிச்சைகளையும் செய்யலாம். ஒரு ஸ்பூன் தேனில், சில துளிகள் எலுமிச்சைச்சாறு விட்டு நன்றாகக் கலந்து, அதை முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் தொடர்ந்து செய்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.



1 கருத்து:

  1. We are urgently in need of kidney donors with the sum of $500,000.00 USD (3 crore) and Also In Foreign currency. Apply Now!,For more info Email: healthc976@gmail.com , Call or whatsapp +91 9945317569

    பதிலளிநீக்கு